Monday, March 19, 2007

துளிக் கவிதை

இருட்டின் ஓலம்
கண்கூசிய வெளிச்சம்
உயிரின் அலறல்

நெருங்கிய உடல்கள்
விலகிய உள்ளங்கள்
கற்பிழந்த ஆன்மாக்கள்

இன்றே கடைசி நாள்
ஈயடித்த திரையரங்கம்
மறுபடியும் முதல் நாள்

48 மணிநேர பணிகள்
அலுக்காத மனிதன்
சூடான கணினி

குளிரூட்டும் கோடை
கொதிக்கும் மழை
தலைகீழ் சென்னை

எழுத்தாளர் ஒளிர்ஞர்

No comments: