ஒரே உடலில் இரண்டு தலை பெண்கள். பார்க்க அதிசயமாகவும், அதே நேரத்தில் பரிதாபமாகவும் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் தங்கள் இயல்பு வாழ்க்கையை எவ்வாறு மேற்கொள்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்த்தால் தலை சுற்றுகிறது.
இயற்கை செய்த நூலிழை பிழையில், ஒரே உறையில் இரண்டு கத்திகள் என்பது போல, ஒரே உடலில் இரண்டு ஆன்மாக்கள். இரண்டு ஆன்மாக்களும், ஒரே உடலில் இருந்து எப்படி ஒற்றுமையாகச் செயல்பட முடியும் என்பது மிகப் பெரிய ஆச்சரியம்.
யாராவது முடிந்தால் இப்படிப்பட்டவர்களின் மின்னஞ்சல் முகவரிகளை வெளிப்படுத்துங்கள். இவர்களைப் பேட்டி கண்டு வெளியிட முனைகிறேன்.இறைவன் (இருந்தால்) படத்தில் கண்டுள்ள இவர்கள் என்றைக்கும் ஒற்றுமையாக மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமென்று மன்றாடுகிறேன்.
“இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான். அவைதான் ஆணும் பெண்ணும்” என்கிறது இத்தாலி பழமொழி ஒன்று. இயற்கையின் பிழைதான் பரிணாம வளர்ச்சி. பரிணாமம் செய்த பிழைதான் மனிதன் உருவானது. இதுபோல ஒரே உடலில் இரண்டு தலைகள். இதுவும் இயற்கையின் பிழைதான். பிழையா, அதிசயமா? அதிசயம் என்பேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment