Monday, March 19, 2007

நீ

நடமாடும் பிணம்
நெருப்புக்கு உணவு
உன்னுடலில் சுமக்கிறாய்
டிரில்லியன் கிருமிகள்

இன்றைக்கு அழகி
நாளைக்கு கிழவி
மறுநாளோ அழுகி

நேற்று குழந்தையாய் தவழ்ந்தாய்
இன்று இளமையால் துடிக்கிறாய்
நாளை கிழமையால் துவள்வாய்

காலத்தின் கண்களில்
நீ ஒரு மண்மூட்டை
அதற்குள் ஏண்டீ
மனக்கோட்டை?

எழுத்தாளர் ஒளிர்ஞர்

No comments: